search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி கற்பழிப்பு"

    • போக்சோவில் வழக்கு பதிவு
    • பலமுறை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40) திருமணமானவர். இவர் வாலாஜாவில் உள்ள தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் செந்தில்நாதனுக்கு டியூசன் சென்டருக்கு படிக்க வந்த 17வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செந்தில்நாதன் தனது பிறந்த நாள் அன்று மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக மாணவியை பலாத்காரம் செய்தார்.

    மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை ஒழித்துவிடுவேன் என மிரட்டியதோடு பலமுறை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

    மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். விசாரித்த போது மாணவி பள்ளிக்கு சரிவர வருவதில்லை அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமையை கூறினார்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரின் இன்ஸ்பெக்டர் ஷாகின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டியூசன் மாஸ்டர் செந்தில்நாதனை தேடி வருகின்றனர்.

    • பாலமுருகன், மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
    • தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை தவளக்குப்பம் பகுதியில் பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு, வீட்டில் இருந்த 17 வயது மாணவி கடந்த 3-ந்தேதி மாயமானார்.

    அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவியை காதலித்து வந்த டிரைவரான பூரணாங்குப்பம் காமராஜ் நகரை சேர்ந்த புண்ணியக்கோடி மகன் பாலமுருகன் (21). மாணவியை வீட்டில் இருந்து கடத்தி சென்று, திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    தவளக்குப்பத்தில் வாடகை வீட்டில் பாலமுருகனுடன் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    குழந்தைகள் திருமண தடை சட்டம், கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

    • சிறுமி தனது தாயிடம் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த சிறுமி திருப்பூர் சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 35). இவருக்கு 13 வயதான மகள் உள்ளார். திருப்பூரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மஞ்சுளாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் மஞ்சுளா தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் மஞ்சுளாவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த பரோட்டா மாஸ்டரான சிவகங்கையை சேர்ந்த சிவமுருகன் (44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுடன் மஞ்சுளாவின் மகளும் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இரவு நேரம் சிவக்குமார் மஞ்சுளாவுடன் உல்லாசமாக இருக்கும் போது அதனை செல்போனில் வீடியோ எடுக்குமாறு மஞ்சுளாவின் மகளிடம் சிவக்குமார் வற்புறுத்தி உள்ளார். மேலும் மஞ்சுளா வீட்டில் இல்லாத நேரத்தில் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து சிறுமியை சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிவக்குமார் சிறுமியிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த சிறுமி இது குறித்து திருப்பூர் சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தார். அந்த அமைப்பினர் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். தாய் மஞ்சுளாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தாயின் கள்ளக்காதலன் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
    • மாணவி கொலையில் ரஜ்னேஷ் குட்டனை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ள தோடர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் ஊட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது மாணவிக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார்.

    ஆனால் மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் மாயமான மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்தார்.

    பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாணவி உடல் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரில் மாணவி கடத்தப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    மாணவியை கற்பழித்து கொன்றது யார்? இதில் ஒரு நபர் ஈடுபட்டரா? அல்லது கும்பலாக ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார்.

    தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வாலிபரை தேடி வந்தனர். இந்தநிலையில் அதே பகுதியில் பதுங்கி இருந்த ரஜ்னேஷ் குட்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மாணவி கொலையில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
    • நஞ்சநாடு கிராம நிர்வாக அதிகாரி பிரியா முன்னிலையில் ரஜ்னேஷ் குட்டன் சரண் அடைந்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ள தோடர் பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் ஊட்டியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது மாணவிக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம் போல பள்ளிக்கு சென்றார்.

    ஆனால் மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் மாயமான மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் பிணமாக கிடந்தார்.

    பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாணவி உடல் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த காரில் மாணவி கடத்தப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

    மாணவியை கற்பழித்து கொன்றது யார்? இதில் ஒரு நபர் ஈடுபட்டரா? அல்லது கும்பலாக ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணையை முடுக்கி விட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (வயது25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தார்.

    தலைமறைவாக இருந்த ரஜ்னேஷ் குட்டனை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அருள், சுசீலா ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வாலிபரை தேடி வந்தனர். இந்தநிலையில் நஞ்சநாடு கிராம நிர்வாக அதிகாரி பிரியா முன்னிலையில் ரஜ்னேஷ் குட்டன் சரண் அடைந்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மாணவி கொலையில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தாமதமாக வீட்டிற்கு வந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார்.
    • பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், குர்ஜாலா பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி. அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 10-ம் வகுப்பு தேர்வுகள் நிறைவடைந்தன. கடைசி நாள் தேர்வு முடிந்ததும் மாணவி வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சிறுமியிடம் தாகேபள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் நாக பாபு நைசாக பேச்சு கொடுத்தார். சிறுமியை ஏமாற்றி அங்குள்ள லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    தாமதமாக வீட்டிற்கு வந்த சிறுமியிடம் குடும்பத்தினர் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை கூறினார். இது குறித்து அவரது குடும்பத்தினர் பிடுகுரல்லா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகபாபுவை கைது செய்தனர்.

    இதனால் அவமானம் அடைந்து மனமுடைந்த நாகபாபுவின் மனைவி அனுஷா விஷம் குடித்தார். வீட்டில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அனுஷாவை மீட்டு தாகேபள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சமீப காலமாக இளம்வயதினரிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து உள்ளது.
    • நவீன தொழில்நுட்பத்தில் சில தேவையற்ற பயன்பாடுகள் உள்ளன.

    சேலம்:

    சேலம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக சிறுமியை அழைத்துக்கொண்டு பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    அரசு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின. பக்கத்து வீட்டைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன், சிறுமி வீட்டிற்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது மாணவிக்கும், அந்த மாணவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருமே 10-ம் வகுப்பு படிப்பதால் பாடம் தொடர்பான சந்தேகம் கேட்பதற்காக அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். இதனால் பெற்றோர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களது பழக்கம் நாளடைவில் எல்லை மீறி போனது. 2 பேரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அம்மாபேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதை அடுத்து மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் மாணவி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் கர்ப்பத்தை கலைப்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் பெற்றோர் மற்றும் டாக்டர்கள், குழந்தை நல அதிகாரிகளும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    அடுத்த மாதம் 2 பேருக்கும் 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளதால் மாணவர் கைது செய்வது குறித்தும் குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். 2 பேரின் எதிர்காலம் கருதியும், சிறுமியின் உடல்நிலை கருதியும் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறார்கள்.

    சமீப காலமாக இளம்வயதினரிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் சில தேவையற்ற பயன்பாடுகள் உள்ளன. செல்போன் மூலம் சிலர் ஆபாச படங்கள் பார்ப்பது, ஆபாச இணையதளங்களில் மூழ்குவது, சாட்டிங், டேட்டிங் என இயல்புக்கு மாறான பழக்க வழங்கங்களில் ஈடுபடுகிறார்கள்.

    இதன் விளைவாகவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். செல்போன் போன்ற தகவல் தொழில்நுட்ப சாதனங்களை ஆக்கப்பூர்வ செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

    மேலும் படிக்கும் குழந்தைகளில் செல்போன் பயன்பாடு, அவர்களின் அன்றாட நடைமுறை அனைத்தையும் பெற்றோர் கண்காணிப்பது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    • வாலிபரிடம் இருந்து வாங்கிய செல்போன் மூலம் வீட்டிற்கு மாணவி போன் செய்தார்.
    • புத்தகத்தை எடுத்து வந்து தருவதற்கு வீட்டில் யாரும் இல்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

    வேப்பூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்தார். விடுமுறை முடித்து பள்ளிக்கு சென்ற அந்த மாணவி முக்கியமான புத்தகங்களை மறதியாக வீட்டிலேயே வைத்து விட்டு சென்று விட்டார்.

    அந்த புத்தகம் கடந்த 7-ந்தேதியன்று தேவைப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு போன் செய்து யாரையாவது எடுத்து வரச் சொல்லலாம் என்று மாணவிக்கு யோசனை தோன்றியுள்ளது. இதற்கு போன் செய்ய செல்போன் தேவைப்பட்டது. இதற்காக பள்ளி அருகே உள்ள சாலையில் சென்ற ஒரு வாலிபரிடம் செல்போன் கேட்டுள்ளார்.

    வாலிபரிடம் இருந்து வாங்கிய செல்போன் மூலம் வீட்டிற்கு மாணவி போன் செய்தார். புத்தகத்தை எடுத்து வந்து தருவதற்கு வீட்டில் யாரும் இல்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதையடுத்து செல்போனை வாலிபரிடம் திருப்பி கொடுத்த மாணவி, அழுதுள்ளார்.

    வாலிபர் ஏன் அழுகிறாய்? என்று கேட்டபோது, நடந்த விஷயங்களை மாணவி கூறினார். நான் ஜெயங்கொண்டம் பகுதிக்கு தான் செல்கிறேன். என்னுடன் வா, உனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன். புத்தகத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வரலாம் என கூறினார்.

    இதனை நம்பிய அந்த மாணவி, வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி சென்றார். அப்போது ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் செல்லாமல் விருத்தாசலம் சாலையில் சென்றார். அங்கிருந்த சவுக்கு தோப்பிற்கு மாணவியை அழைத்து சென்ற வாலிபர் பாலியல் சீண்டல் செய்தார். இதனை எதிர்பாராத மாணவி, வாலிபரிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனால் தப்பமுடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது அதனை தான் மறைத்து வைத்திருந்த செல்போனில் பதிவு செய்தார். இதுகுறித்து வெளியில் சொன்னால் வீடியோவை சமூக வலைதளத்தில் பரவ விடுவேன் என்று மாணவியை மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி அங்கிருந்து பஸ் ஏறி வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறினார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர். அவர் இது குறித்து விசாரணை நடத்த வேப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் மாணவியை பலாத்காரம் செய்தது ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த சிவமூர்த்தி என்பவரது மகன் ஜீவா (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் கேட்டரிங் முடித்து விட்டு தற்போது சேலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்து போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மறுநாள் காலையில் எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
    • பிடிப்பட்ட இருவரும் வேறு யாரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    வாலிபரின் நண்பரும், மாணவியுடன் நெருங்கி பழகினார். இதனால் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 18-ந் தேதி அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு வாலிபர் அழைத்தார்.

    வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் சென்று விடலாம் என்று மாணவியிடம் வாலிபர் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த மாணவி அன்று மாலை வாலிபரின் வீட்டுக்கு சென்றார்.

    வீட்டில் வாலிபரின் நண்பரும் இருந்தார். அவரை மாணவிக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவருடனும் மாணவி பேசினார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த வாலிபர்கள், பின்னர் மது அருந்த தொடங்கினர்.

    மாணவியையும் மது குடிக்குமாறு கூறினர். முதலில் மது குடிக்க மறுத்த மாணவி, பின்னர் நண்பரின் வற்புறுத்தலால் சிறிது மது குடித்தார். இதில் போதை தலைக்கேறியதால் மாணவி மயங்கி விழுந்தார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாலிபர்கள் இருவரும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர். அன்று இரவு முழுவதும் மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மறுநாள் காலையில் எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி மாணவி, தனது தோழி ஒருவரிடம் கூறி அழுதார்.

    நேற்று கல்லூரிக்கு சென்ற மாணவி மன உளைச்சலுடன் காணப்பட்டார். எனவே கல்லூரி ஆசிரியைகள், மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மாணவி ஆசிரியைகளிடம் தெரிவித்தார்.

    அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை தேடினர்.

    மேலும் மாணவர்களின் செல்போன் எண்களை கொண்டு அவர்கள் பதுங்கி இருந்த இடத்தையும் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் இன்று அதிகாலை அவர்கள் இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிடிப்பட்ட இருவரும் இதுபோல வேறு யாரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருவதாக அவர்களை பிடித்த போலீசார் தெரிவித்தனர்.

    • நள்ளிரவில் திடீரென்று சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. மேலும் கடுமையான வயிற்று வலியால் துடித்தார்.
    • பிரசவ வார்டில் அனுமதித்து சோதனை செய்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிந்தது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியி ல் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பெற்றோர் கூலி வேலை பார்த்து வரும் நிலையில் தினமும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் சிறுமி வீட்டு பாடங்களை முடித்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த தோழிகளுடன் சேர்ந்து விளையாட செல்வார்.

    இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் வீட்டு பாடங்களை முடித்ததும் விளையாட சென்ற சிறுமி, பெற்றோர் வந்ததும் வீடு திரும்பினார். பின்னர் அவர்களுடன் சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கினார்.

    நள்ளிரவில் திடீரென்று சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. மேலும் கடுமையான வயிற்று வலியால் துடித்தார். இதைப்பார்த்த பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    தங்களது மகளுக்கு இப்படியொரு பிரச்சினையா என்று அழுதவாறு, அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்தனர்.

    அதன்பேரில் திருச்சியில் டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்தனர். பின்னர் அவரை பிரசவ வார்டில் அனுமதித்து சோதனை செய்ததில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரிந்தது.

    இதையடுத்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த 58 வயது முதியவர் ஒருவர் தன்னிடம் ஆசைவார்த்தை கூறியும், பலமுறை தன்னை மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் அதிர்ந்து போன பெற்றோர் இதுகுறித்து மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அந்த முதியவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • மாணவியின் தாயார் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு அரசு பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி சம்பவத்தன்று பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டுமாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    இவர் தனது வீட்டுக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது வழுக்கம்பாறை சகாயபுரத்தைச் சேர்ந்த ஜான்சன் (வயது 30) என்பவர் மாணவியை தான் வீட்டில் கொண்டு விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அவர், மாணவியை அந்தப் பகுதியில் உள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

    பின்னர் அங்கு வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கு இருந்து தப்பி ஓடி தனது வீட்டுக்கு வந்த சிறுமி நடந்தது பற்றி தனது தாயாரிடம் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இது பற்றி அவரது தாயார் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக கட்டிடத் தொழிலாளி ஜான்சனை போலீசார் கைது செய்தனர். ஜான்சனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது.

    • பள்ளியில் இருந்து மாணவி வரும்போது விக்கி அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று உள்ளார்.
    • வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    தாம்பரம்:

    தாம்பரம் அருகே உள்ள அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக மாணவி மிகவும் சோர்வாக இருந்தார். மேலும் சில நாட்களுக்குமுன்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

    இதுபற்றி ஆசிரியர்கள் விசாரித்தபோது வீட்டின் உரிமையாளரின் மகன் விக்கி (22) என்பவர் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்கியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    பள்ளியில் இருந்து மாணவி வரும்போது விக்கி அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று உள்ளார். வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி விக்கி மாணவியுடன் நெருங்கி பழகினார்.

    மேலும் மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று அதே பகுதி யில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். அப்போது மாணவிக்கு குளிர்பானத்தில் போதை பவுடர் கலந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து போதைக்கு மாணவியை அடிமையாக்கி அடிக்கடி அழைத்து சென்று அத்துமீறி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியிடம் அவரது பெற்றோரை தீர்த்து கட்டி விடுவதாகவும் விக்கி மிரட்டினார். இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லாமல் இருந்து உள்ளார்.

    கைதான விக்கி ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. அவரது நண்பர் இதற்கு உடந்தையாக இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×